சூர்யா ப‌திவுக‌ள்

‘வ‌ன்முறை’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

கர்நாடகாவில் வன்முறை

பதிந்தவர் சூர்யா மேல் April 1, 2008

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீறும் என்ற அறிவிப்புக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரில் நடந்த கலவரத்தில் தமிழ் படம் திரையிடப்படும் தியேட்டர்கள், தமிழ்ச் சங்கம், தமிழக பேருந்துகள் மற்றும் லாரிகள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கர்நாடக போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேடிக்கையே.

தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய தாக்குதல்களையும் போராட்டங்களையும் மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு உடனடியாக கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்.

.... இங்கே பதியப்பட்டது அரசியல், செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »