மாண்புடையோன் மாணவன்
எண்ணியாங்கு எய்திடுவன்
திண்ணியாங்கு செய்திடின்
பின்னணி உணர்ந்து நோக்கிடில்
முன்னணி விரைந்து சேர்ந்திடலாம்!
அக சிந்தை வேறு; புறச் சிந்தனை வேறு!
தகைமையாய் சிந்தித்தால் அகமும் புறமும் ஒன்றாகுமே!
ஞாலம் வென்றிடலாம்; தன்மையாய்
காலம் ஒன்றி கருத்தாய் கடமை செய்தால்
பருவத்தே பயிர் செய்திடலாம்; தீங்கின்றி பாங்காய்.
நன்றி: சு.கோடீஸ்வரன், துணை ஆட்சியர் (ஓய்வு), சிவகங்கை.