உலகப்புகழ் பெற்ற இசை அமைப்பாளரும் நம் தமிழகத்தின்
” இசைப்புயல்” என வர்ணிக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு ஹாலிவுட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் “கோல்டன் குளோப்” விருது “ஸ்லம்டாக் மில்லியனர்” என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காகக் கிடைத்துள்ளது.
இந்த விருதைப் பெற்றதன் மூலம் கோல்டன் குளோப் விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார். மேலும் இந்த விருது ஆஸ்கார் விருதுக்கான நுழைவாயிலாகவே கருதப்படுவதால் ஆஸ்கார் விருதிற்கான கலைஞர்கள் பட்டியலில் நமது ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரும் நேரடியாக இடம்பெரும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ், ஹிந்தி திரைப்படங்களுக்கு பல்வேறு தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றிருந்தாலும் இப்பொழுது உலக புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதைப் பெற்று உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் அது தகும்.