சூர்யா ப‌திவுக‌ள்

‘ஆஸ்க‌ர் விருது’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

த‌மிழ‌க‌ இசைப்புய‌ல் ஏ.ஆர்.ர‌ஹ்மானுக்கு 2 ஆஸ்க‌ர் விருது

பதிந்தவர் சூர்யா மேல் பெப்ரவரி 23, 2009

த‌மிழ‌க‌த்தின் இசைப்புய‌ல் ஏ.ஆர்.ர‌ஹ்மான் “ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்” ப‌ட‌த்தில் சிற‌ப்பாக‌ இசை அமைத்த‌த‌ற்காக‌வும்,  “ஜெய் ஹோ” என்ற‌ அந்த‌ப் ப‌ட‌த்தின் பாட‌லுக்காக‌வும் இர‌ண்டு ஆஸ்க‌ர் விருதுக‌ளைப் பெற்று சாத‌னை ப‌டைத்துள்ளார்.

“ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்” ப‌ட‌த்துக்காக‌ திரைக்க‌தை, இசைய‌மைப்பாள‌ர், ஒளிப்ப‌திவு, ச‌வுண்ட் மிக்சிங் உட்ப‌ட‌ 8 ஆஸ்க‌ர் விருதுக‌ள் கிடைத்துள்ள‌து. உல‌கின் மிக‌ உய‌ரிய‌ விருதான‌ ஆஸ்க‌ர் விருதை 2 பிரிவுக‌ளில் பெறும் முத‌ல் இந்திய‌ர் என்ற‌ பெருமை பெறும் ர‌ஹ்மானுக்கு த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி ம‌ற்றும் த‌மிழ் திரையுல‌க‌ம் சார்பில் கே.பால‌ச‌ந்த‌ர், க‌ம‌ல்ஹாச‌ன், எஸ்.வி.சேக‌ர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட‌ அனைவ‌ரும் வாழ்த்து தெரிவித்த‌ன‌ர். த‌மிழ் திரையுல‌க‌ம் சார்பில் ஏ.ஆர்.ர‌ஹ்மானுக்கு பிர‌மாண்ட‌மான‌ பாராட்டு விழாவும் மிக‌ விரைவில் ந‌டைபெற ஏற்பாடு செய்ய‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ விருதைப் பெறுவ‌த‌ற்காக‌ மேடையேறிய‌ ர‌ஹ்மான் இறுதியில் “எல்லாப் புக‌ழும் இறைவ‌னுக்கே” என‌த் த‌மிழில் பேசி த‌ன‌து ந‌ன்றியை ம‌கிழ்ச்சியோடு தெரிவித்தார்.

மேலும் இப்ப‌ட‌த்திற்கு ச‌வுண்ட் மிக்சிங்‍‍கிற்கான‌ விருது இந்தியாவின் கேர‌ள‌ மாநில‌த்தைச் சேர்ந்த‌ ரெசுல் பூக்குட்டிக்கு  கிடைத்த‌தும், இத‌னால் மூன்று ஆஸ்க‌ர் விருதுக‌ளைப் பெற்றுத் த‌ந்து இவ்விருவ‌ரும் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ள‌ன‌ர்.

.... இங்கே பதியப்பட்டது சினிமா, செய்தி | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

ஆஸ்க‌ர் விருதுக்காக‌ ஏ.ஆர்.ர‌ஹ்மான் பெய‌ர் 3 பிரிவுக‌ளில் ப‌ரிந்துரை

பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 24, 2009

த‌மிழ‌க‌த்தின் இசைப்புய‌ல் ஏ.ஆர்.ர‌ஹ்மான் அவ‌ர்க‌ளின் பெய‌ர் இந்த‌ ஆண்டு ’ஆஸ்க‌ர் விருது’க்கு 3 பிரிவுக‌ளில் ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. ஏ.ஆர்.ர‌ஹ்மான் இசைய‌மைத்த‌ “ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்” என்ற‌ திரைப்ப‌ட‌ம் சிற‌ந்த‌ இசைய‌மைப்பாள‌ர், சிற‌ந்த‌ இய‌க்குன‌ர் உள்ப‌ட‌ 10 ஆஸ்க‌ர் விருதுக‌ளுக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஏ.ஆர்.ர‌ஹ்மானின் பெய‌ர் 3 பிரிவுக‌ளில் அதாவ‌து இந்த‌ப் ப‌ட‌த்திற்கு இசை அமைத்த‌த‌ற்காக‌வும் இர‌ண்டு பாட‌ல்க‌ளுக்காக‌வும் ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்தியாவை சேர்ந்த‌ ஒருவ‌ர் 3 விருதுக‌ளுக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌டுவ‌து இதுவே முத‌ல் முறை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

ஏ.ஆர்.ர‌ஹ்மானின் திரையுல‌க‌ வாழ்வின் ல‌ட்சிய‌மும் ந‌ம‌து எதிர்பார்ப்பும் வ‌ரும் பிப்ர‌வ‌ரி மாத‌ம் 22‍ம் தேதி ஆஸ்க‌ர் விருது அறிவிப்பில் தெரிந்துவிடும். இந்தியாவில் இதுவ‌ரை யாருக்கும் கிடைக்காத‌ பெருமை இந்த‌ ஆஸ்க‌ர் விருதைப் பெறுவ‌தின் மூல‌ம் ஏ.ஆர்.ர‌ஹ்மானுக்கு கிடைக்கும் என‌ ந‌ம்பிக்கையுட‌ன் காத்திருப்போம்.

.... இங்கே பதியப்பட்டது சினிமா, செய்தி | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »