சூர்யா ப‌திவுக‌ள்

‘செய்திகள்’ பகுப்புக்கான தொகுப்பு

நடிகர் நம்பியார் மறைவு

பதிந்தவர் சூர்யா மேல் நவம்பர் 30, 2008

தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களின் ஒருவரும் வில்லன் நடிப்பிற்கு பெயர்போன நடிகர் நம்பியார் அவர்கள் கடந்த நவம்பர் 19-ந் தேதி சென்னையில் காலமானார். இவரது உடலுக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட அனைத்து திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.

வில்லன் நடிகர் என்றால் முதல் அனைவரது ஞாபகத்திலும் வருபவர் நம்பியார் என்றால் மிகையாகாது. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடன் நடித்து வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட், அதிலும் குறிப்பாக எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், படகோட்டி படங்கள் அடங்கும். எம்.ஜி.ஆர் உடன் இவர் திரையில் வந்தாலே மக்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், அந்த அளவிற்கு இருவரிடத்திலும் நடிப்பில் ஒரு போட்டி இருக்கும். இவர்கள் இருவர் போடும் கத்தி சண்டையைப் பார்க்கவே பல தடவை ரசிகர்கள் திரும்ப திரும்ப பார்க்க வருவது மறக்க முடியாத ஒன்று.  ஒரு காலகட்டத்தில் இவரை நிஜ வில்லனாகவே மக்கள் நினைக்கும் அளவிற்கு தனது நடிப்பின் மூலம் பெயர் வாங்கியவர். இவர் தனது உருட்டும் கண்களாலும், ஒரு விதமாக கையை பிசைந்து வசனம் பேசி நடிக்கும் நடிப்பு ஒரு மிரட்டலாகவே இருந்தது.

அந்த காலத்திலேயே ஆங்கிலப் படத்தில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் இவர் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் (எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த்….)  நடித்த பெருமையை பெற்றவர். இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் அமைதியான சினிமா வில்லன் நடிப்பிற்கு சம்பந்தமில்லாத மற்றும் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். இவர் தமிழ் திரையுலகில் ஒழுக்கமான, கட்டுப்பாடான நடிகர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.... இங்கே பதியப்பட்டது செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

ஸ்பாட் ஃபேர் ச‌லுகை டிக்கெட் – ஏர் இந்தியா

பதிந்தவர் சூர்யா மேல் ஜூன் 14, 2008

க‌ட‌ந்த‌ மே மாத‌ம் 27 முத‌ல் ஸ்பாட் ஃபேர் ச‌லுகை டிக்கெட்டை  ஏர் இந்தியா நிருவ‌ன‌ம் அறிவித்துள்ள‌து. உள் நாட்டு விமான‌ங்க‌ள் புற‌ப்ப‌டுவ‌த‌ற்கு 6 ம‌ணி நேர‌த்திற்குள் டிக்கெட் எடுப்ப‌வ‌ர்க‌ளுக்கு (டிக்கெட் இருந்தால் ம‌ட்டுமே..) ஸ்பாட் ஃபேர் ச‌லுகை பொருந்தும். இந்த‌ டிக்கெட்டை ஏர் இந்தியா சிட்டி புக்கிங் ஆபிஸ், விமான‌ நிலைய‌ ரிச‌ர்வேஷ‌ன் க‌வுண்ட‌ர் அல்ல‌து அனும‌தி பெற்ற‌ அனைத்து  ட்ரேவ‌ல் ஏஜ‌ண்ட் மூல‌மாக‌வும் பெற முடியும் என‌ அறிவித்துள்ள‌து. ஆன் லைனிலும் இச்ச‌லுகைக்கான‌ நெட்  டிக்கெட்டை ஏர் இந்தியா www.airindia.in  இணைய‌ முக‌வ‌ரியைப் ப‌ய‌ன்ப‌டுத்தி எடுக்க‌லாம். விமான‌ க‌ட்ட‌ண‌ம் உய‌ர்ந்துள்ள‌ இவ்வேளையில் இந்த‌ ச‌லுகை ம‌க்க‌ளுக்கு ச‌ற்று ஆறுத‌ல் த‌ரும் செய்தியே. இந்த‌ ச‌லுகை திடீரென‌ அவ‌ச‌ர‌ ப‌ய‌ணம் மேற்கொள்ப‌வ‌ர்க‌ளுக்கு மிக‌க் குறைந்த‌ விலையில் டிக்கெட் கிடைக்க‌ வாய்ப்புள்ள‌து என்ப‌தில் எவ்வித‌ ச‌ந்தேக‌மும் இல்லை.
 
இச்ச‌லுகை ப‌ற்றி மேலும் விப‌ர‌ம் அறிய‌ கீழ்க‌ண்ட‌ இணைய‌ த‌ள‌த்தைப் பார்க்க‌வும்:

http://www.indianairlines.in/scripts/spotfares.aspx#

.... இங்கே பதியப்பட்டது செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

தபால் நிலையங்களில் ஏர் டெக்கான் விமான டிக்கெட் வசதி

பதிந்தவர் சூர்யா மேல் April 10, 2008

தமிழக தபால் நிலையங்களில் ஏர் டெக்கான் விமான டிக்கெட்டுக்களை நாளை முதல் விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் இன்டெர்நெட் வசதியுள்ள தபால் நிலையங்களில் டெக்கான் நிருவனம் தனது விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்ய தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் பொது மக்கள் இந்த வசதியைப் பெறமுடியும். இச்சேவைக்கு ஐந்து சதவிகிதம் சர்வீஸ் சார்ஜ் தபால்துறை பெற்றுக்கொள்ளும். விமான டிக்கெட்டுக்கள் தபால் நிலையங்களில் பெரும் வசதியை கொண்டு வந்தது வரவேற்க வேண்டிய விஷயம் என்பதில் சந்தேகமேயில்லை.

Added on Jun 09, 2008

ர‌யில், த‌னியார் ப‌ஸ் ம‌ற்றும் உள்நாட்டு விமான‌ங்க‌ளின் டிக்கெட்டுக‌ளும்…… 

ர‌யில் ம‌ற்றும் த‌னியார் ப‌ஸ் டிக்கெட்டுக‌ள் பெறும் வ‌ச‌தியும் த‌பால் நிலையங்களில் தொட‌ங்கியிருப்ப‌து க‌ண்டிப்பாக‌ இப்போதுள்ள‌ ர‌யில்வே முன்ப‌திவு நெரிச‌லை குறைக்கும், அதும‌ட்டுமில்லாம‌ல் இப்பொழுது உள்நாட்டு விமான‌ங்க‌ளின் (இந்திய‌ன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷ‌ர், பார‌மெள‌ண்ட், ஏர் டெக்கான், ஸ்பைஸ் ஜெட்) டிக்கெட்டுக‌ளும் கிடைக்க‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து ந‌ல்ல‌ விஷ‌ய‌மே. ஏ.ஆர்.எம்.ஐ. சொல்யூசன் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த‌ வ‌ச‌தி அறிமுக‌ப்ப‌டுத்துவ‌தாக‌வும், அர‌சு ப‌ஸ் டிக்கெட்டுக‌ளும், இன்ஸ்ட‌ன்ட் ம‌ணியார்ட‌ர் வ‌ச‌தியும் விரைவில் கிடைக்க‌ ஏற்பாடு செய்வ‌து என்றும் முடிவு எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அனைத்து த‌பால் நிலைய‌ங்களிலும் இந்த‌ வ‌ச‌தி விரைவில் அறிமுக‌ப்ப‌டுத்தினால் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் தான்…

.... இங்கே பதியப்பட்டது செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

கன்னட அமைப்புகளை கண்டித்து தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதம் – ரஜினி, கமல் பங்கேற்ப்பு

பதிந்தவர் சூர்யா மேல் April 6, 2008

கர்நாடக அரசைக் கண்டித்தும், கன்னட அமைப்புகளின் வன்முறைகளை எதிர்த்தும் தமிழ் திரையுலகினர் அனைவரும் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம்  மேற்கொண்டனர். இதில் ரஜினி, கமல் உட்பட அனைத்து திரையுலக கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்காக சென்னை சேப்பாக்கம் அரசினர் மாளிகை எதிரில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.

காலை 8 மணிக்குத் தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த போராட்டத்தின் காரணமாக உலகமெங்கும் நடைபெறவிருந்த படப்பிடிப்புகளும், தமிழக திரை அரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. கர்நாடகாவில் அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக ஆட்டம் போடுகிறார்கள் என்றும் இதை முதலமைச்சர் உடனடியாக தடுத்து இப்பொழுதே நகத்தால் கிள்ளி எறிய வேண்டும் என்றும் ரஜினிகாந்த் ஆவேசமாகப் பேசினார். தமிழ்த் திரையுலகமே ஒரே இடத்தில் ஒன்று கூடி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டது நமக்குள் இருக்கும் ஒற்றுமையைக் காட்டியது.

.... இங்கே பதியப்பட்டது அரசியல், செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

கர்நாடகாவில் வன்முறை

பதிந்தவர் சூர்யா மேல் April 1, 2008

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீறும் என்ற அறிவிப்புக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரில் நடந்த கலவரத்தில் தமிழ் படம் திரையிடப்படும் தியேட்டர்கள், தமிழ்ச் சங்கம், தமிழக பேருந்துகள் மற்றும் லாரிகள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கர்நாடக போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேடிக்கையே.

தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இத்தகைய தாக்குதல்களையும் போராட்டங்களையும் மத்திய அரசின் கவனத்திற்கு தமிழக அரசு உடனடியாக கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம்.

.... இங்கே பதியப்பட்டது அரசியல், செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

திடீர் ராஜினாமா – விஜய டி. ராஜேந்தர்

பதிந்தவர் சூர்யா மேல் மார்ச் 29, 2008

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விஜய டி. ராஜேந்தர் தான் வகித்து வந்த தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை திடீரென்று கடந்த மார்ச் 25, செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார். இவர் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் குரல் கொடுக்க தனது தற்போதைய பதவி தடையாக இருப்பதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தார்.

.... இங்கே பதியப்பட்டது அரசியல், செய்திகள் | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »