சூர்யா ப‌திவுக‌ள்

புல்லாங்குழ‌ல்

பதிந்தவர் சூர்யா மேல் ஜனவரி 1, 2009

அனைவருக்கும் எமது முதற்கண் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள்.

சிங்கப்பூரில் க‌விமாலை இப்புத்தாண்டை முன்னிட்டு ந‌ட‌த்திய கவிதைப் போட்டியில் எனது நண்பரின் தகப்பனார் உயர்திரு சு.கோடீஸ்வரன், துணை ஆட்சிய‌ர் (ஓய்வு) அவர்கள் எழுதிய கவிதையை இங்கு எனது ந‌ன்றியுடன் இதோ..

மாத‌மோ மார்க‌ழி கீத‌மோ குழ‌லோசையே
ஏழிசையில் குழ‌ல் இன்னிசை ஆன‌தே
வ‌ண்டொரு மூங்கிலில் துளை இட்ட‌து நோக்கின‌ன்
க‌ண்டொரு மூங்கிலை குடைந்து குழ‌ல் ஆக்கின‌ன்
ஈர‌டி இட்ட‌ன‌ன் ஏழ் துளை ஏழு சுர‌ ம‌றிய‌ வைத்த‌ன‌ன்
எண் துளை குழ‌லும் சேர்த்த‌ன‌ன்
எண் தொகை நூல் அறிய‌வே
இத‌ய‌த்துட் துளை இட்ட‌ன‌ன்
எதையும் தாங்கும் இத‌ய‌ம் உத‌ய‌மாக‌வே
மென்மையாய் மேன்மையாய் க‌வினுறு க‌லையுட‌ன் குழ‌ல் வ‌டித்த‌ன‌ன்
தொன்மையான‌ போழ்திலே
முல்லைக் குழ‌ல் கொன்றைக் குழ‌ல்
ஆம்ப‌ல் குழ‌ல் ஊதின‌ரே
ம‌ண்ணுல‌க‌ ந‌ல்லோசை வாய‌சை விர‌லசை காற்ற‌சைவால் குழ‌லோசை ஆன‌தே
விலை ம‌லிவாயினும் இன்ன‌ர் இளைய‌ர் எனுஞ் சொல்விடுத்து
க‌ல்லோராயினும் க‌ற்றோராயினும்
இசைப்பார் இசைத்தால் குழ‌லோசை வாராதோ
குழ‌லொடு ஒலி பாட‌ல் குவ‌ல‌ய‌த்தார் ம‌ன‌ம் ஆட‌ல் க‌ண்ண‌ன்
குழ‌லிசை நாட‌ல் க‌ண்ண‌ன் குழ‌லோ ப‌ன்சூரி. ப‌ன்சூரி எனில் மூங்கிலோசை
ம‌ன்னுயிர் வருந்திடில் நின்ன‌ருள் வ‌ல‌த்தால் குழ‌லிசைத்தால்
ந‌ன்னுமா வ‌ருத்த‌ம் நீக்கிட வேணு கான‌ம் த‌ர‌ வாராயோ க‌ண்ணா..

ஆக்கம் – சு.கோடீஸ்வரன்,  துணை ஆட்சிய‌ர் (ஓய்வு), சிவகங்கை.

ஒரு பதில் -க்கு “புல்லாங்குழ‌ல்”

  1. Anandan சொன்னார்

    இசைத் தமிழ் ஒரு கலை… தமிழும் இசையாய் (வார்த்தை ஜாலத்தில்) இருப்பது இக்கவிதையின் சிறப்பு…

    இக்கவிதை அரங்கேற்றம் (சிங்கப்பூர்-ல்) நடந்தபோது நண்பர் பிரதீப் (கவிதையின் ஆசிரியர்) என்னுடன் இருக்க வேண்டியதாயிற்று… இந்தப் பதிவீட்டின்-மூலம் அவருடைய மனவருத்தம் தீரட்டும்…

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>